திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப வழக்கு!! நீதிமன்ற விசாரணை தள்ளிவைப்பு!!
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தள்ளிவைக்கப்பட்டு, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீது தனி நீதிபதி உத்தரவுகள் பிறப்பித்தார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஒவ்வொரு உத்தரவும் மேல்முறையீடு மனுக்களின் எண்ணிக்கையை உயர்த்துவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையேற்று விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


