மதுரை விமான நிலையத்துக்கு சர்வதேச அந்தஸ்து!! ஒரு புதிய அத்தியாயம்!!

மதுரை விமான நிலையத்துக்கு சர்வதேச அந்தஸ்து கிடைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தென் தமிழகத்துக்கு ஒரு முக்கியமான நுழைவாயிலாக செயல்படுகிறது.


இதனால், மதுரைக்கு சர்வதேச யாத்ரீகர்கள் மற்றும் வணிக பயணிகள் ஈர்க்கப்படுவர். மேலும், மதுரையின் பிராந்தியத்தில் வர்த்தகம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை ஆதரிக்கவும் உதவும்.


மதுரையின் மக்களவை தொகுதி எம்பியான சு.வெங்கடேசன், எங்களின் இடைவிடாத போராட்டம் வெற்றி பெற்றது. இனி விமான நிலையத்தை தரம் உயர்த்துவதற்கான பணிகளை ஒன்றிய அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனக் கோரியுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.