ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000 - 3ம் கட்ட வாக்குறுதியை வெளியிட்டு எடப்பாடி பழனிசாமி அதிரடி
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிகொண்டிருக்கிறது. இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் என அரசியல் களம் அனல் பறக்கிறது.
இது ஒருபுறம் இருக்க தேர்தல் அறிக்கை (வாக்குறுதிகள்) தொடர்பானப் பேச்சுகளையும் அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல் இரண்டு கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டிருக்கிறார். அதன்படி,
* பொங்கல் தொகுப்புடன் இனி ஆண்டுதோறும் ரூ.1000 வழங்கப்படும்.
* 12 ஆம் வகுப்பு முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போருக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும்.
* மக்களின் சுமையைக் குறைக்க ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000 தரப்படும்.
* நகரப்பகுதியில் நடைபாதை சிறு வியாபாரிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் தள்ளுபடி
* மீன்பிடி தடைக்காலத்தில் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.8000 இருந்து 12,000 மாக உயர்த்தி வழங்கப்படும்.
* விசைத்தறி நெசவாளர்களுக்கு 1400 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்" என்று அறிவித்திருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


