உலக நாடுகளின்‌ மீது புது வரி! - சட்டத்திற்கு உட்பட்ட ஐடியாவோடு வரும் ட்ரம்ப் - அது என்ன?

நேற்று முன்தினம் (பிப்ரவரி 20), அமெரிக்க அதிபர்‌ ட்ரம்ப் உலக நாடுகளின் மீது விதித்திருக்கும் வரிக்கு எதிராக தீர்ப்பளித்தது அமெரிக்க உச்ச நீதிமன்றம்.

ஆனாலும், அந்த வரிகளை ரத்து செய்வதாக இல்லை ட்ரம்பும், அவரது அரசாங்கமும்.

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் அதிருப்தியில் இருந்த ட்ரம்ப் இப்போது மேலும் வரியைக் கூட்டியுள்ளார்.

இது குறித்து தனது‌ ட்ரூத் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது...
ட்ரம்ப் - பரஸ்பர வரி

"அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் அமெரிக்காவிற்கு எதிரான சமீபத்திய தீர்ப்பை நன்றாக ஆய்வு செய்து பார்த்ததில்...

அமெரிக்க அதிபராகிய நான், உலக அளவிலான‌ வரியை 10 சதவிகிதத்தில் இருந்து 15 சதவிகிதமாக உயர்த்துகிறேன்.

பல ஆண்டுகளாக பல நாடுகள் அமெரிக்காவைத் தொடர்ந்து சுரண்டி வந்திருக்கின்றன.

இதனால், அடுத்த சில மாதங்களில் முழுவதும் அனுமதிக்கப்பட்ட, சட்டத்திற்கு உட்பட்டு ஒவ்வொரு நாட்டிற்கும் புது வரிகள் விதிக்கப்படும்.

இது அமெரிக்காவை மீண்டும் சிறப்பானதாக மாற்றும் (MAGA) - முன்னெப்போதும் இல்லாத வகையில்".

ஆக, ட்ரம்பின் ஆட்டம் இன்னும் முடியவில்லை!

https://truthsocial.com/@realDonaldTrump/116109447886304328

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.