கிருஷ்ணகிரி: சக மாணவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட மாணவி; தாய் கண்டித்ததால் தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமி அப்பகுதியிலுள்ள அரசுப்பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வந்தார்.
அதே பள்ளியில் படித்து வந்த உறவினரான மாணவர் ஒருவர், அந்த மாணவியுடன் பழகி வந்த நிலையில், மாணவியுடன் சேர்ந்திருப்பதுபோல் மொபைல் போனில் படம் எடுத்துள்ளார்.
பின்பு, அந்தப் படத்தை மாணவியின் தாயாரின் மொபைல் போனுக்கு அனுப்பியிருக்கிறார்.
இதைப் பார்த்து கோபமடைந்த மாணவியின் தாயார், இதுகுறித்து விசாரித்து மகளைக் கண்டித்துள்ளார். இதனால் கவலை அடைந்த மாணவி, கடந்த 1 ஆம் தேதி வீட்டில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.
மயங்கி விழுந்த மாணவியை குடும்பத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குக் கடந்த சில நாள்களாகத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 7 ஆம் தேதி உயிரிழந்தார்.
மாணவியின் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


