15 நிமிடங்களில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்: `சம்பா ரவை கருப்பட்டிக் கேசரி - வீட்டிலேயே செய்வது எப்படி?

சம்பா ரவை கருப்பட்டிக் கேசரி

தேவையானவை:

சம்பா ரவை – ஒரு கப்

கருப்பட்டி – 400 கிராம் (பொடித்தது)

நெய் – 150 மில்லி

முந்திரி - 20 கிராம்

உலர்திராட்சை – 20 கிராம்

ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

தண்ணீர் – அரை லிட்டர்

உப்பு – ஒரு சிட்டிகை

சம்பா ரவை கருப்பட்டிக் கேசரி

செய்முறை:

அடுப்பைக் குறைவான தீயில் வைத்து சம்பா ரவையை வெறும் வாணலியில் இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு வறுத்து எடுத்துக்கொள்ளவும். ஒரு பானில் 75 மில்லி நெய்விட்டு சூடாக்கி அதில் முந்திரி, உலர் திராட்சையை வறுத்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் வாணலியில் இருக்கும் அதே நெய்யில் வறுத்த சம்பா ரவையைப் போட்டு மேலும் ஒன்றிரண்டு நிமிடங்களுக்கு வறுக்கவும். இதனுடன் தேவையான தண்ணீர், ஒரு சிட்டிகை உப்பு மற்றும் பொடித்த கருப்பட்டியைப் போட்டு மிதமான தீயில் இக்கலவையைக் கைவிடாமல் கிளறவும். பிறகு இதில் மீதமுள்ள நெய், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, உலர் திராட்சை ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி கலவை அல்வா பதத்துக்கு வந்தவுடன் இறக்கி சூடாகப் பரிமாறவும்.

ரத்தத்தைச் சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும் தன்மை கருப்பட்டிக்கு உண்டு.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.