நடிகை அர்ச்சனா கவியின் ‘டேட்டிங் ஆப்’ காதல் – பரபரக்கும் மறுமண ரகசியம்!

நம்ம மலையாள நடிகை அர்ச்சனா கவி இருக்காங்கள்ல, அவங்க இப்ப மறுபடியும் கல்யாணம் பண்ணி லைஃப்ல செட்டில் ஆனதுதான் ஏரியாவுல ஹாட் டாப்பிக்! இது அவங்களுக்கு ரெண்டாவது கல்யாணம். போன தடவை யூடியூபர் அபிஷ் மேத்யூவை கட்டினாங்க, ஆனா, ரெண்டு பேரும் பிரிய வேண்டியதாப் போச்சு.

விவாகரத்துக்கு அப்புறம், அவங்க மனசு ரொம்ப டல்லா இருந்தப்ப, பக்கபலமா ஒரு ஆள் கிடைச்சாரு. அவர்தான் இப்போ அவங்க ஹஸ்பெண்ட், ரிக் வர்கீஸ். இவரு பிசினஸ் மேன்-னு சொல்றாங்க.

எங்க, எப்படி மீட் பண்ணாங்க?

கேட்டால் ஆச்சரியப்படுவீங்க! ஒரு டேட்டிங் ஆப் மூலமாத்தான் ரெண்டு பேரும் பேச ஆரம்பிச்சிருக்காங்க. சும்மா டைம் பாஸா பேசின விஷயம், அப்புறம் நல்ல லவ்வா மாறி, இப்ப கல்யாணம் வரைக்கும் வந்து நிக்குது. அர்ச்சனா, “இந்தக் கெட்ட காலத்துலயும் எனக்கு மனசுக்குப் புடிச்ச, ரொம்ப நல்ல மனுஷனைக் கண்டுபிடிச்சுட்டேன்”னு இன்ஸ்டாகிராம்ல போட்ட பதிவுதான் இப்போ பட்டிதொட்டியெல்லாம் பரவி இருக்கு.

திருமணச் செய்தியை அர்ச்சனா சொல்லலனாலும், அவங்க ஃப்ரெண்டு, டிவி ஆங்கர் தன்யா வர்மா கல்யாணப் போட்டோவைப் போட்டு விஷயத்தைக் கன்ஃபார்ம் பண்ணிட்டாங்க.

Actress Archana Kavi Re-Marriage

பொதுவா, விவாகரத்துக்கு அப்புறம் ஒரு பொண்ணு, துணிஞ்சு அடுத்த ஸ்டெப் எடுத்து லைஃபை ஆரம்பிக்கும்போது, அதை நிறைய பேர் பாராட்டுவாங்க. அதுவும் தன்னோட மனநலப் போராட்டங்கள் பத்தி வெளிப்படையா பேசின அர்ச்சனா, இப்போ புதுசா ஒரு வாழ்க்கையில நுழைஞ்சிருக்கிறது, நிறைய பேருக்கு ஒரு தைரியத்தைக் கொடுக்குது.

இப்போ அவங்க போட்டோஸ் எல்லாம் ஃபுல் ட்ரெண்டிங்! போன வருஷம் (2025-ல) ‘ஐடென்டிட்டி’னு (IDENTITY) ஒரு படம் மூலமா சினிமாவுக்கு ரீ-எண்ட்ரி கொடுத்தாங்க. இப்ப இந்த சந்தோஷமான செய்தியால மறுபடியும் லைம்லைட்டுக்கு வந்துட்டாங்க.

The post நடிகை அர்ச்சனா கவியின் ‘டேட்டிங் ஆப்’ காதல் – பரபரக்கும் மறுமண ரகசியம்! appeared first on Tamilnadu Flash News.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.