பாகிஸ்தானுக்கு தண்ணீரை தடுக்க புதிய அணை: ஆப்கானிஸ்தான் அரசு அறிவிப்பு

காபூல்: பாகிஸ்​தானுக்கு செல்​லும் தண்​ணீரை தடுக்க குனார் நதி​யில் புதிய அணை கட்​டப்​படும் என்று ஆப்​கானிஸ்​தான் அரசு அறி​வித்​துள்​ளது.

பாகிஸ்​தானும், ஆப்​கானிஸ்​தானும் சுமார் 2,640 கி.மீ. எல்​லையை பகிர்ந்து கொண்​டுள்​ளன. எல்​லைப் பிரச்​சினை காரண​மாக அண்மை கால​மாக இரு நாடு​களுக்​கும் இடையே கடும் சண்டை நடை​பெற்று வரு​கிறது. கத்​தார் நாட்​டின் சமரசத்​தின்​பேரில் கடந்த 19-ம் தேதி சண்டை நிறுத்​தம் அமல் செய்​யப்​பட்​டது. எனினும் இரு நாடு​களின் எல்​லைப் பகு​தி​களில் தொடர்ந்து பதற்​ற​மான சூழல் நிலவி வரு​கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.