கல்மேகி புயல் தாக்கி பிலிப்பைன்ஸில் 114 பேர் உயிரிழப்பு; 127 பேரை காணவில்லை

மணிலா: பிலிப்​பைன்ஸை தாக்​கிய கல்​மேகி புயலுக்கு 114 பேர் உயி​ரிழந்​ததை தொடர்ந்து அந்​நாட்​டில் அவசர நிலை பிரகடனம் செய்​யப்​பட்​டுள்​ளது.

பசிபிக் கடலில் உரு​வான கல்​மேகி புயல் நேற்று முன்​தினம் பிலிப்​பைன்ஸ் நாட்​டின் மத்​திய பிராந்​தி​யத்தை கடந்து தென்​ சீனக் கடல் நோக்கி நகர்ந்​தது. இதில் பிலிப்​பைன்​ஸின் மத்​திய பிராந்​தி​யத்​தில் உள்ள தீவு​களில் பலத்த சூறைக்​காற்று வீசி​யதுடன் கனமழை கொட்​டித் தீர்த்​தது. இதில் நீக்​ரோஸ் ஆக்​சிடென்​டல், செபு உள்​ளிட்ட மாகாணங்​கள் வெள்​ளக் காடாக மாறின. இ​தில் சாலைகளில் நிறுத்​தப்​பட்​டிருந்த கார்​கள், ஆற்​றங்​கரையோர வீடு​கள், பெரிய அளவி​லான கப்​பல் கன்​டெய்​னர்​களும் கூட வெள்​ளத்​தில் அடித்​துச் செல்​லப்​பட்​டன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.