பாகிஸ்தான் - ஆப்கன் பேச்சு தோல்வி: போருக்குத் தயார் என தலிபான் அரசு எச்சரிக்கை
காபூல்: துருக்கியின் இஸ்தான்புல் நகரில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை எட்டாத நிலையில், ‘போருக்கு தயார்’ என ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான் அரசு தெரிவித்துள்ளது.
“நட்பு நாடுகளான துருக்கியும், கத்தாரும் இணைந்து பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயன்றது. நவ.6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் மிகுந்த நம்பிக்கையுடன் ஆப்கன் தரப்பில் பங்கேற்றோம். இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் தீவிரமாக கவனம் செலுத்தும் என எதிர்பார்த்தோம்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


