பாகிஸ்தான் அணுசக்தி மையத்தை தாக்க இந்திரா அனுமதிக்கவில்லை: அமெரிக்க முன்னாள் சிஐஏ அதிகாரி தகவல் 

வாஷிங்டன்: ‘‘இஸ்​ரேலும் இந்​தி​யா​வும் சேர்ந்து பாகிஸ்​தான் அணுசக்தி மையத்தை தாக்​கு​வதற்​கு, அப்​போதைய பிரதமர் இந்​திரா காந்தி அனு​ம​திக்​க​வில்​லை. இது மிக​வும் அவமானகர​மானது’’ என்று அமெரிக்​கா​வின் உளவுத் துறை​யான சிஐஏ முன்​னாள் அதி​காரி தெரி​வித்​துள்​ளார்.

அமெரிக்​கா​வின் சிஐஏ அதி​காரி​யாக பணி​யாற்​றிய​வர் ரிச்​சர்ட் பார்​லோ. இவர் தனி​யார் செய்தி நிறு​வனத்​துக்கு அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 1980-ம் ஆண்​டு​களில் பாகிஸ்​தான் அணுசக்தி ஆராய்ச்​சி​யில் ஈடு​பட்டு வந்​தது. குறிப்​பாக அணுஆ​யுதம் தயாரிப்​ப​தற்கு தேவை​யான யுரேனி​யத்தை கஹுவா அணுசக்தி மையத்​தில் செறிவூட்​டும் நடவடிக்​கை​யில் பாகிஸ்​தான் ஈடு​படு​வ​தாக சந்​தேகம் எழுந்​தது. ஆனால், பாகிஸ்​தான் கைகளில் அணுஆ​யுதம் இருப்​பதை இஸ்​ரேல் உட்பட பல நாடு​கள் விரும்​ப​வில்​லை.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.