சத்தமாகச் சிரிப்பதால் கிடைக்கும் மகத்தான நன்மைகள்: நீண்ட ஆயுளுக்கு இதுவே எளிய வழி!
தினமும் சிறிது நேரம் வாய்விட்டு சிரிப்பது உடல் மற்றும் மன ரீதியாக எண்ணற்ற நன்மைகளைத் தருகிறது என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சிரிப்பு என்பது வெறும் மகிழ்ச்சியின் வெளிப்பாடு மட்டுமல்ல, அது ஆயுட்காலத்தை அதிகரிக்கும் ஒரு எளிய உடற்பயிற்சியாகும். நேர்மறையான எண்ணங்களுடன் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றன.
சத்தமாக சிரிக்கும்போது நமது இதயத்துடிப்பு தற்காலிகமாக உயர்ந்து, பின் தசைகள் தளர்வடைவதால் ரத்த அழுத்தம் சீராகிறது. இது உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி இதய நோய்க்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது.
மேலும், சிரிக்கும்போது உதரவிதானம் மற்றும் நுரையீரல்கள் தூண்டப்பட்டு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கிறது. இது மன அழுத்தம் மற்றும் தேவையற்ற பதற்றத்தை நீக்கி மனதை அமைதிப்படுத்துகிறது. எனவே, ஆரோக்கியமான வாழ்விற்கு கலகலவெனச் சிரிப்பதே சிறந்த மருந்தாகும்.
Edited by Mahendran
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

