விமானம் செங்குத்தாக புறப்பட, இறங்க உதவும் புதிய தொழில்நுட்பம்: சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் சாதனை
சென்னை: விமானம் செங்குத்தாக புறப்படவும், தரையிறங்கவும் உதவும் புதிய தொழில்நுட்பத்தை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.
பொதுவாக விமானங்கள் ஓடுதளத்தில் குறிப்பிட்ட தூரம் விரைவாக ஓடி அதன் பின்னரே மேலே எழும்பும். அதேபோல, வானில் இருந்து தரையிறங்கும்போதும் ஓடுதளத்தில் இறங்கி சற்று தூரம் சென்ற பின்னரே குறிப்பிட்ட இடத்தை வந்தடையும். இந்த நிலையில், விமானம் செங்குத்தாக புறப்படவும், தரையிறங்கவும் உதவும் புதிய தொழில்நுட்பத்தை (Vertical Take-off & Landing - VTOL) சென்னை ஐஐடி விண்வெளி பொறியியல் துறை பேராசிரியர் பி.ஏ.ராமகிருஷ்ணா, இணை பேராசிரியர் ஜோயல் ஜார்ஜ் மனதரா, ஆராய்ச்சியாளர் அனந்து பத்ரன் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


