அக்டோபர் மாதத்தில் தினசரி யுபிஐ பரிவர்த்தனை ரூ.94 ஆயிரம் கோடியாக உயர்வு
புதுடெல்லி: இந்தியாவில் இணையவழியில் மேற்கொள்ளப்படும் ஒட்டுமொத்த பணப் பரிவர்த்தனையில் யுபிஐ 85% பங்கு வகிக்கிறது. இது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தீபாவளி பண்டிகை காரணமாக நடப்பு அக்டோபர் மாதத்தில் அதிகபட்சமாக ஒரே நாளில் யுபிஐ பரிவர்த்தனை எண்ணிக்கை 74 கோடியைத் தாண்டி உள்ளது. இதுபோல, அதிகபட்சமாக தினசரி யுபிஐ பரிவர்த்தனை மதிப்பு இதுவரை 6 முறை ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டி உள்ளது. அதேநேரம் சராசரி தினசரி யுபிஐ பணப் பரிவர்த்தனையின் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் ரூ.94 ஆயிரம் கோடியாக அதிகரித்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

