சைவா சாதனையாளர் விருது: பெண் தொழிலதிபர் மீனலோஷினி ராஜா தேர்வு!

திருச்சியைச் சேர்ந்தவர் மீனலோஷினி ராஜா. இவர் திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஜோராமி சன் பைபர் ஷீட் ஏஜென்சிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.

இவரது தலைமையில் அந்த நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் பயணித்து வருகிறது.

இதற்கிடையே தென்னிந்திய மகளிர் சாதனையாளர்களுக்கு சைவா விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.

பெண் தொழிலதிபர் மீனலோஷினி ராஜா

தொழில் முறையிலான ஆர்வம், கட்டுமான பொருட்கள் மற்றும் தொழில்துறை விநியோகத்தில் உயர் தரமான எண்ணங்களை நிர்ணயித்து, அதன் மூலம் தரமான தீர்வுகளை வழங்கி, தான் சார்ந்த நிறுவனத்தையும், பிறரையும் ஊக்கப்படுத்தி இருக்கிறார். 

அந்த வகையில் தென்னிந்திய அளவில் 2025-ம் ஆண்டிற்கான சிறந்த செயல்திறன் கொண்ட பெண் தொழிலதிபராக சைவா சாதனையாளர் விருதினைப் பெற திருச்சி மீனலோஷினி ராஜா போட்டியாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மீனலோஷினி ராஜாவுக்கு சைவா சாதனையாளர் விருது பெற தேர்வு செய்யப்பட்டதை உறுதி செய்து அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.