அதிமுகவை ஒருங்கிணைக்கும் செங்கோட்டையனின் முயற்சி நிச்சயம் வெற்றி பெறும்: ஓபிஎஸ் கருத்து

பெரியகுளம் / சென்னை: முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் தேனி மாவட்​டம் பெரியகுளத்தில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: அதி​முக ஒருங்​கிணைந்​தால்​தான் வெற்​றி​பெற முடி​யும். இதற்கான முயற்சியை தற்போது செங்​கோட்​டையன் முன்​னெடுத்​துள்​ளார். அவரது முயற்சி நிச்சயம் வெற்​றி​பெறும்.

குடியரசு துணைத் தலை​வ​ராக பொறுப்​பேற்க உள்ள சி.பி.​ரா​தாகிருஷ்ணன் நல்​ல​வர். இவரை ஆதரித்து அனைத்​திந்​திய அண்ணா திரா​விடக் கழக ஒருங்​கிணைப்​புக் குழு உறுப்​பின​ரான தர்​மர் எம்​.பி. வாக்​களித்​துள்​ளார். இவ்​வாறு ஓ.பன்னீர்​செல்​வம் கூறி​னார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.