ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு அடுத்தக்கட்ட வரி விதிக்க தயாராகும் ட்ரம்ப்!

வாஷிங்டன்: ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 2-ம் கட்ட வரிகளை விதிக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது ஏற்கெனவே ரஷ்ய எண்ணெய் வாங்குவதால் 25% கூடுதல் வரிக்கு ஆளாகியுள்ள இந்தியாவுக்கு இன்னுமொரு அடியாக அமையும்.

ஞாயிற்றுக்கிழமை ரஷ்யா உக்ரைன் மீது மிகப்பெரிய அளவில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. 800 ட்ரோன்களை ஏவி ரஷ்யா நடத்திய தாக்குதலில் உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள அரசு அலுவலக வளாகம் பாதிப்புக்கு உள்ளானது. 4 பேர் உயிரிழந்தனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.