தமிழகத்தில் பரவும் இன்ஃப்ளூயன்சா காய்ச்சல்: அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்

தமிழகத்தின் சில பகுதிகளில், பருவநிலை மாற்றத்தால், இன்ஃப்ளூயன்சா எனப்படும் சுவாச மண்டல வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இன்ஃப்ளூயன்சா A (H1N1, H3N2) மற்றும் இன்ஃப்ளூயன்சா B போன்ற வைரஸ் வகைகளால் இந்தக் காய்ச்சல் ஏற்படுகிறது. 

 

அதிக உடல் வெப்பநிலையுடன், உடல் முழுவதும், குறிப்பாக தசைகள் மற்றும் தலையில் கடுமையான வலி இருக்கும். குளிர்வது போன்ற உணர்வும் ஏற்படலாம்.

 

தொடர் இருமல், தொண்டை வலி, மூக்கடைப்பு அல்லது சளி ஒழுகுதல் ஆகியவை காணப்படும்.

 

உடல் சோர்வாகவும், பலவீனமாகவும் இருக்கும்.

 

குழந்தைகளுக்குத் தொடர்ச்சியாக காய்ச்சல் இருந்தால், அல்லது மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால், கட்டாயம் இன்ஃப்ளூயன்சாவுக்கான ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்ய வேண்டும்.

 

வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கு இந்த வைரஸ் எளிதில் பரவக்கூடும். இவர்கள் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

 

நன்றாக ஓய்வெடுத்து, உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். திரவ உணவுகளையும், தண்ணீரையும் அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

 

இன்ஃப்ளூயன்சா அறிகுறிகள் தீவிரமடைந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது..

 

Edited by Mahendran

 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.