காத்மாண்டுவில் நேபாள - சீன ராணுவம் கூட்டுப் பயிற்சி!

காத்மாண்டு: நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நேபாள - சீன ராணுவம் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இவ்விரு நாடுகளின் சாகர்மாதா நட்புறவுக் கொள்கையின்கீழ், ஐந்தாம் ஆண்டாக இந்த ராணுவப் பயிற்சி இன்று(செப். 7) தொடங்கியது.

அதில் நேபாள ராணுவம் மற்றும் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் இணைந்து கூட்டாக ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டன.

10 நாள்கள் நடைபெறும் இந்த ராணுவப் பயிற்சியில் பேரிடர் மேலாண்மை, ஐ.நா. அமைதித் திட்டப் பணிகள், பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவை குறித்து தகவல் பரிமாற்றமும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nepal-China joint military exercise begins in Kathmandu

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.