ஆப்கானிஸ்தானில் மீண்டும் 2 சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அதிர்ச்சியில் மக்கள்!

காபூல்: கடந்த 12 மணி நேரத்தில் கிழக்கு ஆப்கானிஸ்தானில் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக ஜெர்மனி புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நான்கு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆப்கானிஸ்தானில் 2,200 பேர் உயிரிழந்தனர்.

கிழக்கு ஆப்​கானிஸ்​தானில் கடந்த ஞாயிற்​றுக்​கிழமை இரவு 6.0 ரிக்​டர் அளவி​லான கடும் நிலநடுக்​கம் ஏற்​பட்​டது. ஜலாலா​பாத் அருகில் பூமி​யில் 8 கி.மீ. ஆழத்​தில் ஏற்​பட்ட இந்த நிலநடுக்​கத்​தால் குனார் மற்றும் நங்கர்ஹார் மாகாணம் மிக கடுமை​யாக பாதிக்கப்​பட்​டது. வியாழக்கிழமை (செப்டம்பர் 4) நிலவரப்படி இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,205 ஆகவும், காயமடைந்தோர் எண்ணிக்கை 3,640 ஆகவும் உள்ளதாக தலிபான் நிர்வாகம் அறிவித்தது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.