அஸ்வினுக்கு அழைப்பு விடுத்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா!

சிஎஸ்கேவிலிருந்து விலகிய ஆர்.அஸ்வின் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிபிஎல் தொடரில் விளையாட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவில் இருந்து அஸ்வினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்ற அஸ்வின் வெளிநாட்டு லீக் தொடர்களில் விளையாட ஆர்வம் காட்டி வருகிறார்.

இங்கிலாந்தின் தி ஹன்ட்ரெட், துபையின் ஐஎல்டி20 ஆகிய தொடர்களில் அஸ்வின் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது கிரிக்கெட் ஆஸ்திரேலியா அஸ்வினை அழைத்துள்ளதாக ஆங்கில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கிரிக்கெட் ஆஸ்திரேலிய சிஇஒ டாட் கிரீன்பெர்க், “அஸ்வின் மாதிரி ஒருவர் பிபிஎல் தொடருக்கு வந்தால் அது எங்களுக்கு மிகுந்த மதிப்பு மிக்கதாக இருக்கும். அஸ்வின் ஒரு சாம்பியன் கிரிக்கெட்டர். அவர் வந்தால் பிக் பாஷ் லீக்கிற்கும் எங்களது கோடைக் காலத்திற்கும் மிகுந்த வரவேற்பாக இருக்கும்” என்றார்.

மொத்தமாக அஸ்வின் 333 டி20 போட்டிகளில் 317 விக்கெட்டுகள், 1,233 ரன்கள் குவித்துள்ளார்.

After The Hundred and the ILT20, R Ashwin is now reportedly in talks with Cricket Australia for a move to Down Under for the Big Bash League (BBL).

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.