சிஇஓ பதவி மறுக்கப்பட்ட நிறுவனத்தை ரூ.20,000 கோடிக்கு வாங்கிய பெண்

புதுடெல்லி: எந்​தவொரு துறை​யிலும் உயர் பதவியை பிடிக்க விடா​முயற்சி இருந்​தால் அது சாத்​தி​ய​மாகும் என்​பது ஜூலியா ஸ்டீவர்ட்​டின் வாழ்க்​கையி​லிருந்து உறு​தி​யாகி உள்​ளது.

1990-களின் பிற்​பகு​தி​யில் ஆப்​பிள்பீ நிறு​வனத்​தில் பணி​யாற்​றியபோது அவர் ஒருபோதும் தலைமை செயல் அதி​காரி​யாக வரமுடி​யாது என்று கூறப்​பட்​டது. அந்த நிறு​வனத்தை கடுமை​யான உழைப்​பின் மூலம் லாபகர​மான பாதைக்கு அழைத்து சென்​றபோதும் அவருக்கு உயர் பதவி மறுக்​கப்​பட்​டது. இதனால், அந்த நிறு​வனத்​திலிருந்து வெளி​யேறிய அவர் அதன் போட்டி நிறு​வன​மான ஐஎச்​ஓபி கேஷுவல் டைனிங்​கில் இணைந்து கடுமை​யாக பணி​யாற்றி தலைமை நிர்​வாகி​யா​னார். அதன்​பின்​னர் அந்த நிறு​வனத்​தில் கடுமை​யாக உழைத்த அவர் தான் வேலை​பார்த்த ஆப்​பிள்பீ நிறு​வனத்தை வாங்​கும் அளவுக்கு உயர்ந்​தார். 2.3 பில்​லியன் டாலருக்கு (இந்​திய மதிப்​பில் சுமார் ரூ.20,000 கோடி) ஆப்​பிள்பீ நிறு​வனத்தை வாங்​கிய ஜூலியா தனக்கு சிஇஓ பதவியை வழங்​காத முதலா​ளியை அந்த நிறு​வனத்தை விட்டே நீக்​கினார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.