​யுபிஐ வரலாற்றில் சாதனை: ஆகஸ்டில் ரூ.24.85 லட்சம் கோடி பணப் பரிவர்த்தனை

புதுடெல்லி: இந்​தி​யா​வில் யுபிஐ வரலாற்​றில் முதல்​முறை​யாக கடந்த ஆகஸ்ட் மாதம் 20 பில்​லியன் பரிவர்த்​தனை​ நடை​பெற்​றுள்​ளன.

இது தொடர்​பாக தேசிய பேமென்ட்ஸ் கார்ப்​பரேஷன் ஆப் இந்​தியா (என்​பிசிஐ) புள்​ளி​விவரம் நேற்று வெளி​யானது. இதன்​படி நாட்​டில் யுபிஐ பரிவர்த்​தனை முதல்​முறை​யாக கடந்த ஆகஸ்ட் மாதம் 20.01 பில்​லியனை எட்​டியது. இது ஜூலை மாதத்தை விட (19.47 பில்​லியன்) 2.8% அதி​கம் ஆகும். யுபிஐ மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ.24.85 லட்​சம் கோடி மதிப்​புள்ள பரிவர்த்​தனை​கள் நடந்​துள்​ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் சராசரி தினசரி பரிவர்த்​தனை 645 மில்​லிய​னாக (ஜூலை​யில் 628 மில்​லியன்) உயர்ந்​துள்​ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.