சென்னையில் டீ, காபி விலை உயர்வு: டீ ரூ.15, காபி ரூ.20 என நிர்ணயம்!
சென்னை: சென்னையில் இன்று முதல் டீ, காபியின் விலை உயர்த்தப்படுகிறது. இதனால் டீ, காபி பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஐடி நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் முதல் கூலி வேலை செய்பவர்கள் வரை அனைத்து தரப்பினரும் விரும்பி அருந்தும் பானமாக டீ, காபி இருந்து வருகின்றன. பலருக்கும் இவற்றை குடித்தால்தான் வேலையே ஓடும் என்கிற வகையில் மக்களின் உணவு பழக்கவழக்கத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியிருக்கின்றன. சென்னை உள்ள பெரும்பாலான டீக்கடைகளில் தற்போது டீ ரூ.12-க்கும், காபி ரூ.15-க்கும் விற்பனையாகி வருகிறது. இது தவிர சிறிய அளவிலான கடைகளில் டீ ரூ.10-க்கும், காபி ரூ.12-க்கும் விற்பனையாகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

