ஆஸி.யில் அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டினர் குடியேறுவதை கண்டித்து போராட்டம்

சிட்னி: ஆஸ்​திரேலி​யா​வில் வெளி​நாட்​டினர் அதிக அளவில் குடியேறி வரு​கின்​றனர். அந்​நாட்​டில் வசிக்​கும் 2-ல் ஒரு​வர் வெளி​நாட்​டில் பிறந்​தவ​ராக அல்​லது அவரது பெற்​றோர் வெளி​நாட்​டில் பிறந்​தவ​ராக உள்​ளார். இதற்கு நவ-​நாஜிக்​கள் மற்​றும் வலது​சாரி அமைப்​பினர் கடும் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், வெளி​நாட்​டினரின் குடியேற்​றத்​தைத் தடுக்க வலி​யுறுத்தி நாடு முழு​வதும் நேற்று மாபெரும் போராட்​டம் மற்​றும் பேரணி நடை​பெற்​றது. ‘ஆஸ்​திரேலி​யா​வுக்​கான பேரணி’ என்ற பெயரில் நடை​பெற்ற இதில் பல்​லா​யிரக்கணக்​கானோர் பங்​கேற்​றனர். சிட்னி நகரில் நடை​பெற்ற போராட்​டத்​தில் சுமார் 8 ஆயிரம் பேர் தேசி​யக் கொடியேந்​தி​யபடி பங்​கேற்​றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.