ஆஸி.யில் அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டினர் குடியேறுவதை கண்டித்து போராட்டம்
சிட்னி: ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் அதிக அளவில் குடியேறி வருகின்றனர். அந்நாட்டில் வசிக்கும் 2-ல் ஒருவர் வெளிநாட்டில் பிறந்தவராக அல்லது அவரது பெற்றோர் வெளிநாட்டில் பிறந்தவராக உள்ளார். இதற்கு நவ-நாஜிக்கள் மற்றும் வலதுசாரி அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், வெளிநாட்டினரின் குடியேற்றத்தைத் தடுக்க வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்று மாபெரும் போராட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது. ‘ஆஸ்திரேலியாவுக்கான பேரணி’ என்ற பெயரில் நடைபெற்ற இதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். சிட்னி நகரில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 8 ஆயிரம் பேர் தேசியக் கொடியேந்தியபடி பங்கேற்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


