வாகனங்களுக்கான ஃபேன்சி எண்கள் ஏல முறையில் ஒதுக்கீடு: வரைவு விதிகளை வெளியிட்டது தமிழக அரசு
வாகனங்களுக்கான ஃபேன்சி எண்களை ஏல முறையில் ஒதுக்கீடு செய்வது தொடர்பான வரைவு விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் இரு சக்கர வாகனம், கார், வேன், ஜீப், லாரி போன்ற வாகனங்களுக்கு, வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் பதிவு எண் வழங்கப்படுகிறது. அதில், ஃபேன்சி எண்ணை வாங்குவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். தற்போது, வாகனங்களுக்கான ஃபேன்சி எண்களை ஏல முறையில் ஒதுக்கீடு செய்யும் வகையில், புதிய நடைமுறையை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இதற்காக, மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்து புதிய வரைவு விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

