அமெரிக்க வரி நெருக்கடி: தமிழக ஜவுளித் துறை மீள்வது சாத்தியமே... எப்படி?

கோவை: ஏற்றுமதியைவிட உள்நாட்டு ஜவுளி வணிகம் 3 மடங்கு அதிகம். எனவே, மத்திய, மாநில அரசுகள் உதவினால், அமெரிக்காவின் வரி நெருக்கடியில் இருந்து மீள்வோம் என்று ஜவுளித் தொழில் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தென்னிந்திய மில்கள் சங்கத் (சைமா) தலைவர் எஸ்.கே.சுந்தரராமன் கூறும்போது, “அமெரிக்கா, இந்தியா மீது விதித்துள்ள 50 சதவீத வரி விதிப்பு ஏற்புடையதல்ல. அதிர்ச்சிகரமானது. இதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.