இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோரை நியமித்தார் அதிபர் டொனால்டு ட்ரம்ப்
நியூயார்க்: அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அலுவலக இயக்குனராக பணியாற்றும் தனது நெருங்கிய நண்பர் செர்ஜியோ கோரை, இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக, அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நெருங்கிய நண்பர் செர்ஜியோ கோர். இவர் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் உள்ள அதிபர் அலுவலக இயக்குனராக உள்ளார். இவரை இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து சமூக ஊடகத்தில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியிருப்பதாவது: செர்ஜியோ கோர் எனது மிகச் சிறந்த நண்பர். இவர் பல ஆண்டுகளாக என்னுடன் இருப்பவர். அவருக்கு பதவி உயர்வு அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அவர் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக பணியாற்றுவார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


