79th Independence Day: டபுள் தீபாவளி அறிவிப்பு டு ஆர்.எஸ்.எஸ் 100 வருட சேவை - மோடி முழு உரை ஹைலைட்ஸ்

"21-ம் நூற்றாண்டுக்கு ஏற்றவாறு 2047-க்குள்..." - மோடி

"அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களுக்காக, ஒரு குழுவை அமைக்க முடிவு செய்துள்ளோம். இந்தக் குழு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் இலக்குகளை அடையவும், விக்ஸித் பாரதத்தின் தொலைநோக்கு பார்வையை உணரவும் செயல்படும். இந்த குழு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பணியை முடிக்கும். 21-ம் நூற்றாண்டுக்கு ஏற்றவாறு, உலகளாவிய சூழலுடன் இணைந்து, 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு, தற்போதைய விதிகள், சட்டங்கள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது."

"நாட்டுக்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் 100 ஆண்டுகால சேவை..." - மோடி பெருமிதம்

"ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் (RSS) என்ற ஒரு அமைப்பு 100 ஆண்டுகளுக்கு முன்பு, பிறந்தது என்பதை இன்று நான் பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன். நாட்டிற்கு 100 ஆண்டுகள் சேவை செய்வது பெருமைமிக்க, பொன்மயமான அத்தியாயம். ஸ்வயம்சேவகர்கள் நமது தாய்நாட்டின் நலனுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர். ஒரு வகையில், RSS உலகின் மிகப்பெரிய அரசு சாரா நிறுவனம். இது 100 ஆண்டுகால அர்ப்பணிப்பு வரலாற்றைக் கொண்டுள்ளது."

எமெர்ஜென்சி குறித்து மோடி!

"50 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தின் கழுத்து நெறிக்கப்பட்டு நாடு சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. எமெர்ஜென்சி விதிக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. அரசியலமைப்பைக் கொலை செய்த இந்தப் பாவத்தை நாட்டில் எந்தத் தலைமுறையும் மறக்கக்கூடாது. அரசியலமைப்பைக் கொன்ற பாவிகளை அவர்கள் மறக்கக்கூடாது. இந்திய அரசியலமைப்புக்கான நமது அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்துவதன் மூலம் நாம் முன்னேற வேண்டும். அதுதான் எங்கள் உத்வேகம்."

"பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடமிருந்து..." - மோடி

"அடுத்த பத்து ஆண்டுகளில், 2035-ம் ஆண்டுக்குள், தேசிய பாதுகாப்பு கேடயத்தை விரிவுபடுத்தவும், வலுப்படுத்தவும், நவீனப்படுத்தவும் விரும்புகிறேன். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடமிருந்து உத்வேகம் பெற்று, சுதர்சன சக்ராவின் பாதையை நாம் தேர்ந்தெடுத்துள்ளோம். நாடு சுதர்சன சக்ரா இயக்கத்தைத் தொடங்கும்"

"உயர் சக்தி மக்கள்தொகை இயக்கத்தை தொடங்க முடிவு செய்துள்ளோம்" - மோடி

"ஒரு கவலை மற்றும் சவால் பற்றி தேசத்தை எச்சரிக்க விரும்புகிறேன். சதித்திட்டத்தின் கீழ் நாட்டின் மக்கள்தொகை மாற்றப்பட்டு வருகிறது. ஒரு புதிய நெருக்கடிக்கான விதைகள் விதைக்கப்படுகின்றன. ஊடுருவுபவர்கள் என் நாட்டின் இளைஞர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கிறார்கள். ஊடுருவுபவர்கள் என் நாட்டின் சகோதரிகள் மற்றும் மகள்களை குறிவைக்கிறார்கள். இதை பொறுத்துக்கொள்ள முடியாது. இந்த ஊடுருவல்கள் அப்பாவி பழங்குடியினரை தவறாக வழிநடத்தி அவர்களின் நிலத்தை கைப்பற்றுகின்றன. நாடு இதை பொறுத்துக்கொள்ளாது. எல்லைப் பகுதிகளில் மக்கள்தொகை மாற்றம் ஏற்படும் போது, அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. எந்த நாடும் அதை ஊடுருவல்காரர்களுக்கு ஒப்படைக்க முடியாது. எனவே, உயர் சக்தி மக்கள்தொகை இயக்கத்தை தொடங்க முடிவு செய்துள்ளோம் என்பதை நான் கூற விரும்புகிறேன்.

"வறுமை பற்றி நான் படிக்கத் தேவையில்லை; அது எனக்குத் தெரியும்" - மோடி

"வறுமை என்றால் என்னவென்று புத்தகங்களில் படிக்க வேண்டிய அவசியமில்லை, அது என்னவென்று எனக்குத் தெரியும். நான் அரசாங்கத்திலும் பணியாற்றியுள்ளேன், அதனால்தான் அரசாங்கம் கோப்புகளுடன் மட்டும் இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய நான் எப்போதும் முயற்சித்தேன். அது குடிமக்களின் வாழ்க்கையை அடைய வேண்டும். ஏழைகள், ஓரங்கட்டப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் உரிமைகளுக்காக அலைந்து திரிந்து, ஒரு அரசு அலுவலகத்திலிருந்து மற்றொரு அரசு அலுவலகத்திற்கு ஓடி தங்கள் வாழ்க்கையை கழிக்க வேண்டிய ஒரு காலம் இருந்தது. இன்று, அரசாங்கம் உங்கள் வீட்டு வாசலுக்கு வருகிறது, பயனாளிகளுக்கு நேரடியாக திட்டங்களை வழங்குகிறது."

"3.5 கோடி வேலைவாய்ப்பு; பிரதான் மந்திரி விக்ஸித் பாரத் ரோஜ்கர் யோஜனா" - மோடி அறிவிப்பு

இந்த நாளில், நமது நாட்டின் இளைஞர்களுக்காக ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான திட்டத்தை நாங்கள் தொடங்குகிறோம். இன்று முதல், பிரதான் மந்திரி விக்ஸித் பாரத் ரோஜ்கர் யோஜனா செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், தனியார் துறையில் முதல் வேலை பெறும் இளைஞர்களும் பெண்களும் அரசாங்கத்திடமிருந்து ரூ.15,000 பெறுவார்கள். அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும். பிரதான் மந்திரி விக்ஸித் பாரத் ரோஜ்கர் யோஜனா கிட்டத்தட்ட 3.5 கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்"

"மகாத்மா ஜோதிபா பூலேவின் கொள்கைகள்..." - மோடி

"மிக விரைவில், சிறந்த சமூக சீர்திருத்தவாதி மகாத்மா ஜோதிபா பூலேவின் 200-வது பிறந்தநாள் விழா வருகிறது. இந்த ஆண்டு விழாவிற்கான நிகழ்வுகளை நாங்கள் தொடங்க உள்ளோம். மகாத்மா ஜோதிபா பூலேவின் கொள்கைகளில், அவர் வழங்கிய மந்திரங்கள், நமக்கு உத்வேகம் அளிக்கின்றன. பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை. ஏழைகளுக்கு முன்னுரிமை அளித்து, மாற்றத்தின் உச்சத்தை எட்ட விரும்புகிறோம்."

"உலக சூழ்நிலையில் பொருளாதார சுயநலம் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது" - மோடி

"கடந்த பத்தாண்டுகளில், இந்தியா சீர்திருத்தம் செய்து, சிறப்பாக செயல்பட்டு, மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் இப்போது, நாம் இன்னும் அதிக வலிமையுடன் முன்னேற வேண்டும். சமீபத்திய ஆண்டுகளில், அந்நிய நேரடி முதலீடு, காப்பீட்டுத் துறை அல்லது உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் செயல்பட அனுமதிப்பது உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை நாங்கள் செயல்படுத்தியுள்ளோம். நான் இதை சிறந்த அனுபவத்துடன் சொல்கிறேன். நாம் அவ்வாறு செய்தால், உலகம் நமது பலத்தை ஒப்புக்கொள்ளும். இன்று, உலக சூழ்நிலையில் பொருளாதார சுயநலம் நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால், அந்த நெருக்கடிகளைப் பற்றி நாம் அழுதுகொண்டிருக்காமல் இருப்பது காலத்தின் தேவை. நாம் அந்தப் பாதையை எடுத்தால், எந்த சுயநலமும் நம்மை சிக்க வைக்க முடியாது."

"நமக்கான சொந்த விண்வெளி நிலையத்தை உருவாக்குவதற்கு பணியாற்றி வருகிறோம்" - மோடி

"இன்று விண்வெளித் துறையில் சாதனையை நாம் அனைவரும் காண்கிறோம். குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா ஐ.எஸ்.எஸ்ஸிலிருந்து திரும்பியுள்ளார். அடுத்த சில நாள்களில், அவர் இந்தியாவுக்கு வருகிறார். விண்வெளியில், ககன்யானுக்கு, ஆத்மநிர்பர் பாரத் என நாங்கள் தயாராகி வருகிறோம். நமக்கான சொந்த விண்வெளி நிலையத்தை உருவாக்குவதற்கும் நாங்கள் பணியாற்றி வருகிறோம். நாட்டின் 300-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்கள் விண்வெளித் துறையில் மட்டுமே செயல்படுகின்றன என்பதில் நான் பெருமைப்படுகிறேன். அந்த 300 ஸ்டார்ட்அப்களில், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் முழு திறனுடன் பணியாற்றி வருகின்றனர். இது நமது நாட்டின் இளைஞர்களின் பலம், இது நமது நாட்டின் இளைஞர்கள் மீதான எங்கள் நம்பிக்கை."

"இந்தியா தேசிய ஆழ்கடல் ஆய்வுப் பணியைத் தொடங்கவுள்ளது" - மோடி

"ஒருவர் மற்றவர்களை அதிகமாக சார்ந்து இருந்தால், சுதந்திரம் பற்றிய கேள்வியே மங்கத் தொடங்குகிறது. ஆத்மநிர்பர் என்பது இறக்குமதி, ஏற்றுமதி, ரூபாய், பவுண்டுகள் அல்லது டாலர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை. அதன் பொருள் மிகவும் விரிவானது. ஆத்மநிர்பர் என்பது நமது பலத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. நாம் இப்போது சமுத்திர மந்தன் நோக்கிச் செல்கிறோம். இதை முன்னோக்கி எடுத்துச் சென்று, கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புகளைத் தேடும் பணியில் ஈடுபட விரும்புகிறோம். எனவே, இந்தியா தேசிய ஆழ்கடல் ஆய்வுப் பணியைத் தொடங்கவுள்ளது."

"இந்த தீபாவளியை டபுள் தீபாவளியாக மாற்றப் போகிறேன்" - GST குறித்து மோடி

"இந்த தீபாவளியை, நான் உங்களுக்கு இரட்டை தீபாவளியாக மாற்றப் போகிறேன். கடந்த எட்டு ஆண்டுகளில், ஜி.எஸ்.டி-யில் ஒரு பெரிய சீர்திருத்தத்தை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை நாங்கள் கொண்டு வருகிறோம். இது நாடு முழுவதும் வரிச்சுமையைக் குறைக்கும்."

"இளைஞர்களே புதிய யோசனையுடன் வாருங்கள்; நான் உங்களுடன்..." - மோடி ஊக்கம்

"சுதந்திரத்திற்காக எண்ணற்ற மக்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர், தங்கள் இளமைக்காலம் முழுவதையும் சிறைகளில் கழித்தனர். அடிமைத்தனத்தின் சங்கிலிகளை உடைக்க தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர். இளைஞர்களே புதிய யோசனையுடன் வாருங்கள். கனவு காணுங்கள் நான் உங்களுடன் துணை நிற்கிறேன். புதிய வரலாற்றைப் படைப்போம். நாம் இன்னும் பெரியதாகக் கனவு காண வேண்டும். இந்த அரசு உங்களோடு துணை நிற்கும். சுயசார்பு இந்தியாவே இன்றைய தேவை. கடந்த தலைமுறை சுதந்திரத்திற்காகப் போராடியது இந்த தலைமுறை சுயசார்புக்காகப் போராட வேண்டும். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போர் விமானங்களுக்கு நமது ஜெட் என்ஜின்கள் இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்."

"இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் நேரத்தில்..." - மோடி இலக்கு

"நமது எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய நாம் பல நாடுகளைச் சார்ந்து இருக்கிறோம் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால், உண்மையில் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்க, நாம் எரிசக்தி சுதந்திரத்தை அடைய வேண்டும். கடந்த 11 ஆண்டுகளில், நமது சோலார் ஆற்றல் திறன் 30 மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியா இப்போது அணுசக்தியில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. இந்த திசையில் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். தற்போது 10 புதிய அணு உலைகள் செயல்பாட்டில் உள்ளன. இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் நேரத்தில், நமது அணுசக்தி திறனை பத்து மடங்கு அதிகரிக்க இலக்கு வைத்துள்ளோம்."

"இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செமி கண்டக்டர்ஸ்..." - மோடி

"தொழில்நுட்பத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றி நாம் பேசுகையில், செமி கண்டக்டர்ஸ் பற்றி கூறுகிறேன். எந்த அரசாங்கத்தையும் விமர்சிக்க நான் செங்கோட்டைக்கு வரவில்லை. ஆனால் நாட்டின் இளைஞர்கள் அதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். செமி கண்டக்டர்ஸ் உற்பத்தி குறித்த யோசனை 50 - 60 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது. ஆனால், கருவிலேயே அது கொள்ளப்பட்டது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். நாங்கள் 50-60 ஆண்டுகளை இழந்தோம். இன்று நாம் செமி கண்டக்டர்ஸ் உற்பத்தியில் பணியாற்றி வருகிறோம். இந்த ஆண்டு இறுதிக்குள், இந்திய மக்களால் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செமி கண்டக்டர்ஸ் சந்தைக்கு வரும்."

"அணு ஆயுத மிரட்டல்களை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது" - மோடி

"ஆபரேஷன் சிந்தூர் மூலம், நமது வீரர்கள் எதிரியின் கற்பனைக்கு அப்பாற்பட்ட சக்தியுடன் பதிலளித்துள்ளனர். ஏப்ரல் 22-ம் தேதி, எல்லைக்கு அப்பால் இருந்து பயங்கரவாதிகள் அப்பாவி பொதுமக்களைக் குறிவைத்து கொன்றனர். முழு தேசமும் கோபமடைந்தது. பாகிஸ்தானில் நமது ஆயுதப்படைகளால் ஏற்படுத்தப்பட்ட அழிவு மிகவும் பரவலாக இருந்தது. அணு ஆயுத மிரட்டல் நீண்ட காலமாகத் தொடர்கிறது. ஆனால் இனியும் அது பொறுத்துக்கொள்ளப்படாது. நமது எதிரிகள் இதுபோன்ற முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டால், நமது ஆயுதப்படைகள் தங்கள் சொந்த விதிமுறைகளின்படி பதிலடி கொடுக்கும். பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்."

"ரத்தமும் தண்ணீரும் ஒன்றாக செல்ல முடியாது" - மோடி

79th Independence Day - மோடி
79th Independence Day - மோடி

"சிந்து நதி நீர் ஒப்பந்தம் நியாயமற்றது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். சிந்து நதியிலிருந்து வரும் நீர் எதிரிகளின் நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்து வருகிறது. அதே நேரத்தில் நமது சொந்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஏழு தசாப்தங்களாக நமது விவசாயிகளுக்கு இவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்திய இந்த ஒப்பந்தம் என்ன? இந்தியாவின் தண்ணீர் எதிரிகளின் விளைநிலத்துக்கு பயன்படுத்த முடியாது. கடந்த பல ஆண்டுகளாக நமது விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்தார்கள். இந்தியாவின் தண்ணீர் இந்தியாவின் விவசாயிகளுக்கே. ரத்தமும் தண்ணீரும் ஒன்றாக செல்ல முடியாது."

"78 ஆண்டுகளாக அரசமைப்பு சட்டம் தான் நமது நாட்டிற்கு வழிகாட்டியாக இருக்கிறது" - மோடி

#WATCH | Delhi: Prime Minister Narendra Modi says, "Today, from the ramparts of the Red Fort, I pay my respectful homage to the makers of the Constitution, who guide the country and give direction to the country. Today we are also celebrating the 125th birth anniversary of Dr.… pic.twitter.com/gaf8Gifutc

— ANI (@ANI) August 15, 2025

"சுதந்திர தினம் என்பது நம்பிக்கை மற்றும் அபிலாஷைகளின் திருவிழா. 1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்றபோது, மகத்தான சாத்தியக்கூறுகள் இருந்தன. சவால்களும் பெரியவை. கடந்த 78 ஆண்டுகளாக அரசமைப்பு சட்டம் தான் நமது நாட்டிற்கு வழிகாட்டியாக இருக்கிறது. 79-வது சுதந்திர தினத்தன்று அரசியலமைப்பை உருவாக்கியவர்களுக்கு இந்தியா தலைவணங்குகிறது. இன்று சிறப்பு வாய்ந்த நாள் ஆபரேஷன் சிந்தூர் வீரர்களை வணங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆபரேஷன் சிந்தூர் வீரர்களை நினைத்து நாம் பெருமிதம் கொள்கிறோம். டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்தநாளையும் இன்று கொண்டாடுகிறோம். இந்தியாவின் அரசியலமைப்பிற்காக

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.