உக்ரைனுடனான அமைதி ஒப்பந்த கெடு முடிவடையும் சூழலில் ட்ரம்பின் சிறப்பு தூதர் - புதினுடன் சந்திப்பு

மாஸ்கோ: ரஷ்​யா-உக்​ரைன் அமைதி ஒப்​பந்​தம் ஏற்​படுத்​து​வதற்கு அமெரிக்கா விதித்த காலக்​கெடு ஆகஸ்ட் 8-ம் தேதி​யுடன் முடிவடைய உள்​ளது. இந்த நிலை​யில், அமெரிக்க அதிபரின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்​காப் ரஷ்ய தலைநகர் மாஸ்​கோ​வில் நேற்று அதிபர் புதினை சந்​தித்து பேச்​சு​வார்தை நடத்​தி​னார்.

உக்​ரைனில் ரஷ்​யா​வின் தாக்​குதலை முடிவுக்கு கொண்டு வரவேண்​டும் என்​ப​தில் அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்ப் மிக தீவிரமாக உள்​ளார். இதற்​காக உக்​ரைனுடன் ஒரு அமைதி ஒப்​பந்​தத்தை மேற்​கொண்டு போரை நிறுத்த வேண்டி ரஷ்​யா​வுக்கு 50 நாட்​கள் வரை காலக்​கெடு விதிப்​ப​தாக டொனல்டு ட்ரம்ப் தெரி​வித்​தார். இல்​லை​யெனில் கடுமை​யான பொருளா​தார அபராதங்களை ரஷ்யா எதிர்​கொள்ள நேரிடும் என்​றும் அவர் எச்​சரிக்கை விடுத்​தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.