பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் நகரங்களுக்கான ‘மாஸ்டர் பிளான்’ தயாரிப்பு பணிகள் தீவிரம்!
கோவை மாநகரைத் தொடர்ந்து பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் நகரங்களுக்கான மாஸ்டர் பிளான் அறிக்கை தயாரிப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. மேற்கண்ட பகுதிகளில் ‘ட்ரோன் சர்வே’ நிறைவடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரு நகரின் அடுத்த 40 வருட வளர்ச்சியை கருத்தில்கொண்டு ‘மாஸ்டர் பிளான்’ (முழுமைத் திட்டம்) தயாரிக்கப்படுகிறது. ஒருங்கிணைந்த போக்குவரத்து, தொழிற்சாலை வழித்தடம், பசுமை மற்றும் நீர்நிலை கட்டமைப்புகள், பொருளாதார திட்டமிடல், உள்வட்ட சுற்றுச்சாலைகள், நகர்ப்புற வனவியல், வளர்ச்சிக்கான நில உபயோகங்கள், திட்ட சாலைகள் ஆகியவற்றின் நில விவரங்கள் சர்வே எண்ணுடன் மாஸ்டர் பிளானில் இடம் பெறும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

