உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் கூட்டுறவு துறை: தமிழக அரசு பெருமிதம்

சென்னை: ஒவ்​வொரு குடும்​பத்​துக்​கான உணவு பாது​காப்பை கூட்​டுறவுத் துறை உறுதி செய்​வ​தாக அரசு பெரு​மிதம் தெரிவித்துள்​ளது. இதுதொடர்​பாக வெளி​யிடப்​பட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: 2021-ம் ஆண்டு சட்​டப்​பேர​வைத் தேர்தலுக்கு முன் தேர்​தல் அறிக்​கை​யில் கூறியபடி, கூட்​டுறவு நிறு​வனங்​களில் ஒரு குடும்​பத்​தில் 5 பவுனுக்கு உட்​பட்டு நகைக்கடன் பெற்ற 11.70 லட்​சம் பயனாளி​களுக்கு ரூ.4,904 கோடி அளவுக்​குத் தள்​ளு​படிச் சான்​றிதழுடன், அவர்​கள் அடமானம் வைத்த நகைகளும் திருப்பி வழங்​கப்​பட்​டன.

கூட்​டுறவு நிறு​வனங்​கள் மூலம் வழங்​கப்​பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக் கடன்​களில் ரூ.2,118.80 கோடி தள்​ளு​படி செய்​யப்​பட்டு 1 லட்​சத்து 1,963 மகளிர் சுய உதவிக் குழுக்​களைச் சார்ந்த 10 லட்​சத்து 56,816 பெண்​கள் பயன்​பெற்​றனர். பயிர்க் கடன்​களை உரிய காலத்​தில் திருப்​பிச் செலுத்​தும் விவ​சா​யிகளுக்கு வட்​டி​யில்​லாப் பயிர்​கடன்​களாக 66 லட்​சத்து 24,955 விவ​சா​யிகளுக்கு ரூ.53,340.60 கோடி வழங்​கப்​பட்​டுள்​ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.