விவசாயிகள் கடன் பெற முடியாமல் தவிக்கவிடும் ‘சிபில் ஸ்கோர்’ நிபந்தனை!
விவசாயிகள் வங்கிகளில் கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிபந்தனையை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தின் பிரதான தொழிலாக விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இம்மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் விவசாயத்தை முதன்மை தொழிலாகச் செய்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில், தென்னை, பருத்தி, வாழை, கரும்பு, நெற்பயிர், புளி, மா, பனை, கீரை வகைகளை அதிகமாகப் பயிரிட்டு வருகின்றனர். தமிழகத்தில் விவசாய தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காததால், பெரும்பான்மையான விவசாயிகள் பல்வேறு இடங்களில் கடன் வாங்கி தான் பாரம்பரிய விவசாய தொழிலைச் செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

