5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் தொடங்கினார் பிரதமர் மோடி: பிரேசிலில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டிலும் பங்கேற்கிறார்
புதுடெல்லி: கானா, நமீபியா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி, நேற்று சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார். மேலும் இந்த சுற்றுப்பயணத்தையொட்டி பிரிக்ஸ் மாநாட்டிலும் அவர் பங்கேற்றுப் பேசவுள்ளார். பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் செல்லும் வழியில் கானா, டிரினிடாட் & டொபாகோ, அர்ஜென்டினா, நமீபியா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி செல்கிறார்.
ஜூலை 9-ம் தேதி வரை அவர் 5 நாடுகள் சுற்றுப்பயணத்தில் இருப்பார். இதற்காக, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை புறப்பட்டுச் சென்றார். முதலாவதாக நேற்று மாலை அவர் கானா சென்றடைந்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

