சமூக ஆர்வலர்கள், திரைத்துறையினர் அஜித்குமார் மரணம் பற்றி வாய்திறக்காதது ஏன்?- ஜெயக்குமார் கேள்வி

சிவகங்கை அருகே காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் மரணமடைந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

திருப்புவனம் லாக்கப் டெத் - உயிரிழந்த இளைஞர் அஜித்குமார்

அந்த வகையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மரமரணமடைந்த அஜித்குமார் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியிருக்கிறார். 

``திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை.  ஸ்டாலின் சாரி சொல்லிவிட்டால் போதுமா? பதவி விலக வேண்டும். நிகிதா மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த திமுக-வினரை இதுவரை போலீஸ் விசாரிக்காதது ஏன்?

சமூக ஆர்வலர்கள், திரைப்பட ஆர்வலர்கள் எல்லாம் வானத்திற்கும், பூமிக்கும் குதிப்பவர்கள் அவர்கள் யாரும் ஏன் இந்த மரணத்தைப் பற்றி பேசவில்லை. வாய்மூடி மெளனமாக இருக்கிறார்கள்.

ஜெயக்குமார் - முன்னாள் அமைச்சர்
ஜெயக்குமார் - முன்னாள் அமைச்சர்

அந்த நிலைமையில்தான் தமிழ்நாடு இருக்கிறது. 2026-ல் தமிழ்நாடு ஒரு மாபெரும் மாற்றத்தை உருவாக்கும். லாக்அப் மரணங்கள் இனி தொடரக் கூடாது” என்று திமுக அரசை விமர்சித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...  https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...  https://bit.ly/3PaAEiY

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.