விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியா முன்னேற்றம்: மத்திய இணை அமைச்சர் நம்பிக்கை
புதுச்சேரி: விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியா முன்னேற்றம் அடைந்து வருகிறது என்றும், ஐந்து ஆண்டுகளில் பத்து மடங்காகும் என்றும் மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் தெற்கு பிராந்திய மாநாட்டில் ‘டிஜிட்டல் இந்தியாவில் குடிமக்களை மேம்படுத்துதல்: நிர்வாகம், மேலாண்மை மற்றும் நிறுவன சீர்திருத்தங்கள்’ என்ற தலைப்பில் மத்திய பல்கலைக்கழக கலாச்சார அரங்கில் கருத்தரங்கம் இன்று நடந்தது. இந்தக் கருத்தரங்கில் மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசியது: “கடந்த 11 ஆண்டுகளில் மத்திய அரசு தொடங்கி வைத்த சீர்திருத்தங்களால் சராசரி இந்தியரின் சுயமரியாதை கணிசமாக மேம்பட்டுள்ளது. மக்கள் நாட்டைப் பற்றி அதிக நம்பிக்கையுடன் உள்ளனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

