இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தாத வரை அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை இல்லை: ஈரான் திட்டவட்டம்

தெஹ்ரான்: தங்கள் நாட்டின் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தொடரும் நிலையில், அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்த முடியாது என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இது குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி இன்று அந்நாட்டின் அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “அமெரிக்கர்கள் பேச்சுவார்த்தைகளுக்கு தீவிரமாக அழைப்பு விடுக்கும் செய்திகளை பலமுறை அனுப்பி வருகின்றனர். ஆனால், இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போர் நிற்காத வரை, ராஜதந்திரம் மற்றும் உரையாடலுக்கு இடமில்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம். இஸ்ரேலுக்கு எதிரான நமது எதிர்வினைக்குப் பிறகு, இதுபோன்ற நாடுகள் ஆக்கிரமிப்பில் இருந்து தங்களை தூர விலக்கிக் கொள்ளும் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.