‘இஸ்ரேலுக்கு தற்காப்பு உரிமை உண்டு’ - ஜி7 கூட்டறிக்கையில் ஈரான் குறித்து இருப்பது என்ன?

கனானாஸ்கிஸ் (கனடா): பயங்கரவாதத்தின் மையமாக ஈரான் உள்ளது என்று குற்றம்சாட்டியுள்ள ஜி7 தலைவர்கள், இஸ்ரேல் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் உரிமையைக் கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ஜி7 உச்சிமாநாடு கனடாவின் கனானாஸ்கிஸ் என்ற இடத்தில் தொடங்கியுள்ளது. இதன் முதல் அமர்வில் பங்கேற்ற உறுப்பு நாடுகளின் தலைவர்கள், இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், ‘ஜி7 தலைவர்களான நாங்கள், மத்திய கிழக்கில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம். இந்தச் சூழலில், இஸ்ரேல் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் உரிமையைக் கொண்டுள்ளது என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். இஸ்ரேலின் பாதுகாப்புக்கான எங்கள் ஆதரவை மீண்டும் வலியுறுத்துகிறோம். பொதுமக்கள் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.