2026 தேர்தலில் எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைப்போம், ஆனா..! - நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன?
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
"தமிழகத்திற்கு பாக்கியில்லாமல் நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஜி.எஸ்.டி இல்லாமல் தமிழகத்திற்கு ரூ.10 லட்சம் கோடி மத்திய அரசு கொடுத்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. சில பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டு இருக்கிறது. நிறைய பேர் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வருவார்கள்.
இதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. 2026ல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமையில் தான் ஆட்சி அமைப்போம். கூட்டணி கட்சிகளின் ஆட்சியாக இருக்கும்.
கீழடியில் நான் நேரில் சென்று ஆய்வு நடத்தி, உதவி தேவைப்பட்டால் மத்திய அரசிடம் வலியுறுத்துவேன். பிரதமர் மோடி ஆண்டுதோறும் காசியிலும், குஜராத்திலும் தமிழ் சங்கமம் நடத்துவது தமிழர்களுக்கு மிகப்பெரிய பெருமை" என்று செய்தியாளர் சந்திப்பில் சில விஷயங்களைப் பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


