மண் பாணை தண்ணீர் எப்படி குளிர்ச்சியாகிறது என்பது தெரியுமா? இதோ விளக்கம்..!

 

கடும் கோடையில் குளிர்ந்த தண்ணீர் குடிக்க விரும்பாதவர் யார்? அதிலும் மண் பானையில் சேமிக்கப்பட்ட தண்ணீர் மிகவும் குளிர்ச்சியுடன், சுவையாக இருக்கும். இதை அனுபவித்தவர்கள் நிச்சயம் மண்ணின் நறுமணத்துடன் கூடிய அந்தத் தண்ணீரின் தனித்துவத்தை உணர்ந்திருப்பார்கள். ஆனால், மின் சக்தியோ அல்லது செயற்கை குளிரூட்டிகளோ இல்லாமலேயே, அந்த தண்ணீர் எப்படி இவ்வளவு குளிர்ச்சியாக இருக்கிறது?

 

இதற்கு காரணம்  மண்பானையின் இயற்கையான அமைப்பில் இருக்கின்ற ரகசியமே. மண் பானையின் மேற்பரப்பில் மிகச்சிறிய துளைகள் இருக்கின்றன. இவை மூலமாக பானையின் உள்ளே உள்ள தண்ணீர் மெதுவாக வெளியேறி, காற்றில் ஆவியாகிறது. இந்த ஆவியாக்க செயலின் போது பானையின் மேல் வெப்பம் எடுத்துச் செல்லப்படுகிறது. இதனால் உள்ளே இருக்கும் தண்ணீர் குளிர்ச்சியடைகிறது. இதனை அறிவியல் ரீதியில் Evaporative Cooling அல்லது ஆவியாக்கக் குளிர்ச்சி எனக் குறிப்பிடுகிறார்கள்.

 

மண் பானை என்பது ஒரு இயற்கை குளிரூட்டி. மின்சாரம் தேவையில்லை, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லை. அதில் தண்ணீர் எப்போதும் சுத்தமாகவும் சுவையாகவும் இருக்கும். பிளாஸ்டிக் மற்றும் உலோக பானைகளுக்கு மாற்றாக, இது ஆரோக்கியமான தேர்வாகும்.

 

எனவே, இயற்கையோடு இணைந்து வாழ, இன்று முதல் மண் பானையில் தண்ணீர் குடிப்போம்!

 

Edited by Mahendran

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.