இந்தியாவிற்கு எப்போதும் எங்கள் துணை இருக்கும்: இலங்கை அதிபர் உறுதி!

இந்தியாவில் தற்பொழுது ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற சம்பவம் தான் இந்திய மட்டுமல்ல உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. குறிப்பாக தீவிரவாதிகளின் தாக்குதலின் பெயரில் 26 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள்.பஹல்காம் சம்பவம் போல கடினமான காலங்களில் இந்தியாவுடன் துணை நிற்போம் என்று இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயகே தெரிவித்துள்ளார்.

ஜம்முகாஷ்மீர் பஹல்காம் சுற்றுலா பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதில் தொடர்பு உடையவர்கள் பாகிஸ்தானுக்கு அளிப்பவர்கள் என்றும், அவர்களுடைய கட்டளையின் பெயரில்தான் இந்த ஒரு சம்பவத்தை அரங்கேற்றி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.பஹல்காம் தாக்குதல் நடடிவக்கையை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து உள்ளது. உலக நாடுகள் இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, இந்தியாவுக்கு ஆதரவாகவும் கருத்துகள் தெரிவித்து வருகின்றன.


அந்த வகையில், கடினமான காலங்களில் இந்தியாவுடன் எப்போதும் துணை நிற்போம் என்றும், பயங்கரவாதத்திற்கு எதிரான இலங்கையின் ஒற்றுமையையும், நமது உறுதிப்பாட்டையும் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தேன். எப்பொழுதும் இந்தியாவிற்கு நாங்கள் துணையாக நிற்போம் என்று நம்பிக்கையையும் கூறியிருக்கிறார் இலங்கை அதிபர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.