சொன்னதை அப்படியே செய்த பிரதமர்:கைது செய்யப்பட்ட வைர வியாபாரி!
பெல்ஜியத்தில் அந்நாட்டு அதிகாரிகளால் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூபாய் 13,500 கோடி நிதி மோசடியில் தொடர்புடைய வைர வியாபாரி மொகுல் சோக்ஸி கைது செய்யப்பட்டுள்ளார் இந்தியாவின் நாடு கடத்தல் தொடர்பான கோரிக்கையை ஏற்று இந்த கைது நடவடிக்கை நடைபெற்றுள்ளது
இதனை குறிப்பிட்டு மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கடந்த 2021 ஆம் ஆண்டில் பிரதமர் மோடி மத்திய விஜிலென்ஸ் கமிஷன் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு ஆகியவற்றின் கூட்டு மாநாட்டில் உரையாற்றிய பொழுது ஏழைகளை ஏமாற்றுபவர்கள் உலகில் எங்கிருந்தாலும் அவர்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் எனக் கூறியிருந்தார்
தற்போது பிரதமர் மோடி மக்களுக்கு அளித்த வாக்குறுதி நிறைவேற்றபட்டுவிட்டது என்பதை மேற்கோள் காட்டி ஏழைகளிடமிருந்து இருந்து பணத்தை கொள்ளையடித்தவர்களை பிரதமர் மோடி விடமாட்டார் நாட்டின் கொள்ளையடித்தவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட வருகிறது அதன்படி தற்போது மெகுல் கைது செய்யப்பட்டுள்ளார் இது மிகப்பெரிய சாதனை என மத்திய இணை அமைச்சர் கூறியுள்ளார்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


