கும்பகோணத்தில் 6 கோயில்களின் தேரோட்டம்: இன்று மகா மக குளத்தில் தீர்த்தவாரி உற்சவம்

மாசி மகத்தையொட்டி கும்பகோணத்தில் உள்ள 6 கோயில்களின் தேரோட்டம் நேற்று விமரிசையாக நடைபெற்றது.

கும்பகோணத்தில் உள்ள சிவன், பெருமாள் கோயில்களில் ஆண்டுக்கு ஒருமுறை மாசி மக விழாவும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவும் நடைபெறும். அதன்படி, நிகழாண்டு மாசி மக விழாவையொட்டி, கும்பகோணம் காளஹஸ்தீஸ்வரர், வியாழ சோமேஸ்வரர், காசி விஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர் மற்றும் திருப்புறம்பியம் சாட்சிநாத சுவாமி ஆகிய 6 சிவன் கோயில்களில் கடந்த 3-ம் தேதியும், சக்கரபாணி சுவாமி, ராஜகோபால சுவாமி, ஆதிவராக சுவாமி ஆகிய 3 பெருமாள் கோயில்களில் 4-ம் தேதியும் கொடியேற்றம் நடைபெற்றது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.