ADMK இரட்டை இலை விவகாரம்: `தேர்தல் ஆணையம் முடிவெடுக்க இடைக்காலத் தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு
அ.தி.மு.க-வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என்று தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, திண்டுக்கல் சூரியமூா்த்தி என்பவர் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 4 வாரங்களுக்குள் தோ்தல் ஆணையம் விசாரித்து முடிவை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, புகழேந்தி உள்ளிட்டோர் ஏற்கெனவே தோ்தல் ஆணையத்தில் பதில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில், அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், `எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவுக்கு 27-ம் தேதிக்குள் பதில் அளிக்கவும், அதுவரை இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவெடுக்க இடைக் காலத் தடை விதிக்கப்படுகிறது" என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


