“சிக்கலுக்கு தீர்வு காண பணியாற்றி வருகிறோம்” - விண்டோஸ் செயலிழப்பு குறித்து சத்யா நாதெள்ளா
ரெட்மாண்ட்: கிரவுட்ஸ்ட்ரைக்கின் தவறான அப்டேட் காரணமாக உலகம் முழுவதும் விண்டோஸ் கணினிகள் செயலிழந்தன. இதன் காரணமாக உலகெங்கிலும் உள்ள விமானப் போக்குவரத்து, வங்கி, தொலைத்தொடர்பு, ஊடக நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களின் செயல்பாடு முடங்கி உள்ளது. இந்த சூழலில் மைக்ரோசாப்ட் சிஐஓ சத்யா நாதெள்ளா ட்வீட் செய்துள்ளார்.
கிரவுட்ஸ்ட்ரைக்கின் Falcon சென்சருக்கான அப்டேட் காரணமாக இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த தவறான அப்டேட் தற்போது திரும்பப்பெறப் பட்டுள்ளது. இருந்தாலும் ப்ளூ ஸ்க்ரீன் எரர் சிக்கலை எதிர்கொண்ட கணினி பயனர்களே மேனுவலாக சீர் செய்யும் வகையில் சில செயல்முறை விளக்கம் தரப்பட்டுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


