எந்த ஒரு கட்டத்திலும் பதற்றம் அடையவில்லை: சொல்கிறார் ஜஸ்பிரீத் பும்ரா | T20 WC

நியூயார்க்: ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா முக்கிய பங்கு வகித்தார். முக்கியமான கட்டங்களில் பாபர் அஸம் (13), முகமது ரிஸ்வான் (31), இப்திகார் அகமது(5) ஆகியோரை பும்ரா ஆட்டமிழக்கச் செய்து பாகிஸ்தான் அணியின் வெற்றியை பறித்தார். ஆட்ட நாயகன் விருது வென்ற பும்ரா கூறியதாவது:

இப்போது பாராட்டுபவர்கள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக நான் காயம் அடைந்திருந்த போதுஇனிமேல் நான் விளையாடமாட்டேன் எனக் கூறினார்கள். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாகவும் சொன்னார்கள். ஆனால் தற்போதுகேள்விகள் மாறி உள்ளன. என்னை பொறுத்தவரையில் நான் அவற்றை கண்டுகொள்ளவில்லை. எனது திறமைக்கு ஏற்றவாறு பந்துவீசுகிறேன். எனக்கு முன்பாக உள்ள பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி செய்கிறேன்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.