“என் வேலையை ஏ.ஐ பறித்துக் கொள்ளுமோ என பயந்தேன்” - பில் கேட்ஸ் கலகலப்பு பகிரவு
வாஷிங்டன்: ஏஐ தொழில்நுட்பம் எவ்வாறாக வேலை செய்கிறது என்பதைப் பார்த்து தான் ஆச்சர்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ். “சேக்‌ஷ்ஸ்பியரின் மிகவும் கடினமான படைப்புகளை எப்படி சாட் ஜிபிடி புரிந்துகொள்ளும் என நான் சந்தேகப்பட்டேன். ஆனால், சாட் ஜிபிடி அதை மிக நேர்த்தியாக செய்து கொடுத்துவிட்டது” என்று ஏஐ தொழில்நுட்பம் பற்றி அவர் வியந்து பேசியுள்ளார்.
கடினமான கூற்றுகளை எப்படி ஏஐ புரிந்து கொள்கிறது என தான் வியப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அதே வேளையில் ஏஐ தொழில்நுட்பம் ஏற்படுத்தக் கூடிய வேலை இழப்புகள் பற்றியும் கவலை தெரிவித்துள்ளார். “Unconfuse Me with Bill Gates” என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பில் கேட்ஸ் ஓபன்ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேனுடன் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது, இருவரும் ஏஐ தொழில்நுட்பத்தின் தற்போதைய நிலவரம் பற்றி பேசினார்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


