பும்ராவின் இடத்தை என்னால் எடுத்துக்கொள்ள முடியாது: சொல்கிறார் ஆகாஷ் மத்வால்

சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் ஆட்டத்தில் லக்னோ அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால் 5 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வேட்டையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தனது அபார பந்து வீச்சால் ஐபிஎல் வரலாற்றில் பிளே ஆஃப் சுற்றில் 5 விக்கெட்களை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் 29 வயதான ஆகாஷ் மத்வால்.

உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் மத்வால், ஒரு பொறியாளர் ஆவார். தனது கிரிக்கெட் கனவை நிறைவேற்றுவதற்காக கட்டிட பொறியாளர் பணியை துறந்துவிட்டு கையில் பந்தை எடுத்தார். மாநில அணியில் இடம் பிடித்த அவர், தனது திறனை நாளுக்கு நாள்மெருகேற்றிக்கொண்டார். இதன்பயனாக அவர், 50 ஓவர் போட்டியில் மாநில அணியை கேப்டனாக வழி நடத்தினார். அப்போது ஐபிஎல் அணிகளின் பார்வை அவர் மீது விழுந்தது. முதலில் மும்பை அணியின் வலை பயிற்சி பந்து வீச்சாளராக ஆகாஷ் மத்வால் தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.