திருவெண்காடு புதன் பகவான் கோயில் தெப்போற்சவம்; திரளான பக்தர்கள் தரிசனம்!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காட்டில் ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வர கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் காசிக்கு இணையான ஆறுகோயில்களில் முதன்மையான கோயிலாகும்.

இந்தக் கோயிலில் சிவனின் முக்கண்ணிலிருந்து உருவான முன்று பொறிகள் வீழ்ந்து முக்குளங்களாக மாறியதாகப் புராண வரலாறுகள் கூறுகின்றன.

திருவெண்காடு தெப்போற்சவம்திரளான

இந்தத் தலத்தில் கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கான முதற்கடவுளாக விளங்கும் புதன்பகவான் தனி சந்நிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

சிவனின் ஜந்து முகங்களில் ஒன்றான அகோரமுகத்துடன் ஈசன் அகோரமுர்த்தியாக தனிசந்நிதி கொண்டு விளங்குகிறார். இந்தத் தலம் மிகவும் தொன்மையானது. இந்தத் தலம் குறித்து வால்மீகி முனிவர், சுவேதாரண்யேஸ்வர தலத்தில் யமனை சுவேதாரண்யேஸ்வரர் எவ்வாறு சம்காரம் செய்தாரோ அவ்வாறு எதிரிகளை ராமன் சம்காரம் செய்தான் எனக் குறிப்பிட்டுள்ளதன் மூலம் இத்தலத்தின் தொன்மையை அறிந்துகொள்ளலம்.

தெப்போற்சவம்திரளான

இந்தக் கோயிலில் ஆண்டுக்கொருமுறை சிறப்புடன் நடைபெறும் இந்திரப் பெருவிழா கடந்த 4 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிறப்புடன் நடைபெற்ற இந்த விழாவின் 12 -ம் நாள் நிகழ்வான தெப்போற்சவம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

தெப்போற்சவத்தை முன்னிட்டுக் கோயிலில் இருந்து சுவாமி அம்பாள் புறப்பட்டு தெப்பத்தில் எழுந்தருளினர். இதனை அடுத்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து தெப்பம் புறப்பட்டு திருக்குளத்தை 5 முறை வலம் வந்தது. இதைக் காணக் கண்கொள்ளாக் காட்சியாகத் திகழ்ந்தது. இந்த வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி அம்பாளை தரிசனம் செய்தனர். தெப்போற்சவத்தை முன்னிட்டு ஏராளமான போலீசார் இங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.