ரிஷப் பந்த் இதுக்காக தான் அணியில் இருக்காரா??…, உண்மையை உடைத்த இந்திய முன்னாள் வீரர்!!

பங்களாதேஷிற்கு எதிரான தொடரில் சஞ்சு சாம்சனுக்கு பதில் ரிஷப் பந்த்க்கு வாய்ப்பு கொடுத்ததற்கு இது தான் காரணம் என சபா கரீம் கூறியுள்ளார்.

சபா கரீம்:

இந்திய அணி பங்களாதேஷிற்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 டெஸ்ட் தொடர்களையும் விளையாட திட்டமிட்டுள்ளது. இந்த தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பங்களாதேஷிற்கு சென்று பயிற்சி செய்து வருகிறது.

டிவிட்டர் :  Enewz Tamil ட்விட்டர்

இதற்கான இந்திய அணியில் தொடர்ந்து சொதப்பி வரும், ரிஷப் பந்த்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தான் ரசிகர்கள் மத்தியில் விமர்சிக்க தக்கதாக உள்ளது. சிறப்பாக செயல்படும் சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவது ஏன் என்ற கேள்வியும் ரசிகர்களிடையே வலுத்து வருகிறது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர், சபா கரீம் ரிஷப் பந்துக்கு இதுதான் கடைசி வாய்ப்பு என்று கூறியுள்ளார்.

இந்தியா உலக கோப்பையை வெல்ல வேண்டுமா?? இவர் அணியில் இருந்தே ஆகணும்…, ஆஸ்திரேலிய வீரர் கருத்து!!

அதாவது, ரிஷப் பந்த் பங்களாதேஷிற்கு எதிராக எப்படி விளையாடுவார் என்பதை பார்த்து இவரது இடத்தை உறுதி செய்ய வேண்டும். இவர், சிறப்பாக செயல்படாத பட்சத்தில், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் உள்ளிட்ட மாற்று வீரர்களை பிளேயிங் லெவனில் தேர்வு செய்யலாம் என்று கூறியுள்ளார். இதே போல, ரோஹித் சர்மாவும் பேட்டிங்கில் தனது பார்மை மீட்டெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

The post ரிஷப் பந்த் இதுக்காக தான் அணியில் இருக்காரா??…, உண்மையை உடைத்த இந்திய முன்னாள் வீரர்!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.